பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலர்களின் பசியுணவைப் பதுக்கி விற்றுப் பணக்காரப் பெருவயிறர் பிரபுக்கள் ஆல்ை பயிர் பச்சை முளைக்குமா இந்த நாட்டில்? பருவமழை பெய்யுமா பொய்யர் மண்ணில்? பார்த்தவர்கள் ஏசாரோ, பரத நாட்டை? படிக்காத ஏழைகளின் பணம் பறிக்கப் பத்திரிகைச் சிற்றின்பப் படங்கள் காட்டிப் பாமரனின் மனதையெல்லாம் படுக்கையாக்கிப் பாலியர்க்குவிபசாரப் பாடஞ் சொல்லும் பாவியர்கள் பத்திரிகை அதிபரானல், பண்பாடு வளருமா இந்த நாட்டில்? பெருங்கொள்கை நூலெல்லாம் குப்பைதானே? பொறுமைக்கு எல்லையிலா பரதநாடே! 24