வானெலி வழியே மையும் கண்கூடு. பண்டைய கலந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த சிறந்த புலவர்களுள் பலர் தென்னுட்டுக் காஞ்சி புரத்தைச் சேர்ந்தவர்க ளன்ருே! - சமயத்துறையில் ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த அப்பர் காட்டிய இணைப்பினைக் கண்டோம். அவர் இமயம் வரை சென்றவர்; ஆங்குள்ள கோயில்களையும் பைந்தமிழால் பாடி யவர். அவருக்கு முன்பும் கங்கை நாடிச் சென்ருர் பலர். மாடல மறையோன் தன் பாவம் நீங்கும் பொருட்டுக் கங்கையாடச் சென்றதைச் சிலம்பு காட்டுகிறது. தென் ட்ைடு ஆண்டாளும் வடகாட்டு மீராவும் இணைத்துப் பேசப் பெறுவர். அண்மையில் வாழ்ந்த தமிழ்நாட்டுக் குமர குருபரர் காசிக்குச் சென்று இந்துஸ்தான் பயின்று ஆங்கி ருந்த சுல்தானிடம் பாட்டிசைத்து இடம்பெற்றுக் காசிமடம் அமைத்தார். அது இன்றும் சிறக்க உள்ளது. அவர் பாடலில் "சலாம் சபாஷ் போன்ற இந்துஸ்தானிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தென்னட்டுச் சங்கரர் காஷ்மீர் வரையில் சென்று தம் கொள்கையைப் பரப்பி, ரீநகரில் தமக்கென் ஒரு கோயிலையும் நிறுவியுள்ளார். அண்மையில் வாழ்ந்த வட நாட்டு விவேகானந்தரும் அரவிந்தரும் தமிழரொடு இணைந்து தத்தம் கொள்கைகளைப் பரப்பி நின்றனர். இவை பற்றிய விளக்கங்களை அவரவர்தம் இலக்கியங்களே நமக்குத் தருகின்றன. இத்தகைய பெரியார்தம் இலக்கியங்களெல் லாம் காட்டு ஒருமைப்பாட்டையே உணர்த்துகின்றன. அண்மையில் வாழ்ந்த பாரதியாரும் அவரடி போற்றி" எழுந்த பல நேற்றைய கவிஞர்களும் இன்றைய நல்ல இலக்கிய ஆசிரியர்களும் தம் எழுத்துக்களில்-கவிதையா 1. சிலம்பு 27,-110. 14'