பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை 罩。需莎 பெரும்பாலோர் செல்வர்களையும் அரசியல் வாதிகளையும் அமைச்சர் பெ ரு ம க் க ைள யு ம் வாய் கொண்டு’ (வாய்க்கு வந்தபடி) பாடி வருவதையும் அவர்கள் பற்றிப் பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்தங்களைப்பாடி மகிழ்வதையும் காண்கின்றோம். நெய்க்குடத்தை எறும்பு கள் சுற்றித் திரிவதுபோல் இப்பெருமக்களைச் சுற்றித், திரியும் இவர்கட்கு இறைவன்தான் அறிவு கொளுத்த வேண்டும். இவ்வுலகில் இவர்களைத் தடுத்து நிறுத்துவார் ஒருவரும் இலர். கா. சு. பிள்ளையும் புகழுடன் வாழ்ந்தார்; காசுக்காகப் பாடாத பெருமகனார் அவர், அவர் நமக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக நின்று நம்மை வாழ்த்து பவராக அமைந்து திகழட்டும்.