பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xiii) இக்கட்டுரைகள் விளங்குவதைக் காணலாம். பேராசிரியர் சுப்பு ரெட்டியாரின் ஆழ்ந்த புலமையும், சமயப் பொது நோக்கும், அறிவியல்சார் ஆய்வுப் பயிற்சியும் இந்நூலுக்கு அகலமும் ஆழமும் நுட்பமும் தந்து இதனை வளப்படுத்தி யுள்ளன. நம் தமிழ்ப் பண்பாட்டு மரபு ஒன்றுபட்டுள்ள சிறப்பினை இன்றைய கருத்தோட்டத்துக்கு ஏற்ப விளக்கித் தெளிவிக்கும் இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ந்து வரவேற்றுப் பயனடையும் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம் மெரினா வளாகம் அ. அ. மணவாளன் சென்னை-600 005. - - - . . . . 13-12-1993