பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி i 83 வேண்டும் என்று விருப்பத்தோடு வந்த இவனைக் காப்பற்றாமல் விட்டால் எல்லாப் பொருள்களையும் காப்பவர்’ என்ற உம்முடைய தன்மை குலைந்து போகு மல்லவா? அனாதி காலமாக நம்முடைய ஆணையை மீறி தன் இச்சைப்படி ஒழுகிப் போந்த இவனைக் குற்றங்களுக் கேற்பத் தண்டிக்காமல் நாம் ஏற்றுக் கொண்டால் நாம் ஏற்படுத்திய சாத்திர மரியாதை குலையாதோ? என்றல்லவோ நும்திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்கன மாயின் தும்மை நாடி வந்த இவனைக் காவாமல் இவனுடைய குற்றங்களை நோக்கித் தண்டித்தால் உம்முடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு? இவனைக் காப்பாற்றிய பொழுதன்றோ உம்முடைய அருட் குணம் ஒளி பெறும்? இவனைத் தண்டிக்கா விட்டால் சாத்திரம் நிலையாது; இவனைக் காக்கவில்லையேல் அருள் முதலிய திருக்குணங்கள் ஒளிபெறா என்று நீர் அஞ்ச வேண்டா, உம்மைச் சிறிதும் தோக்கிப் பாராது தன் இச்சை பில் செல்பவனிடம் சாத்திரத்தைப் பயன்படுத்துவீர்; உம்மை அன்புடன் நாடி வந்த இவனைப் பாவங்களினின்றும் நோக்கிக் காப்பாற்றுவீர். இப்படிச் செய்தால் சாத்திரமும் பழுதுபடாது; உம்முடைய அருட்குணமும் உயிர் பெற்றுத் துலங்கும். இவ்வாறு எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனியசொற்களைப் பகர்ந்து அவன் சினத்தை மாற்றி, அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு செய்வர். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ்சம் இளக வில்லையேல், பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேத நனை அங்கீகரிக்குமாறு செய்வார். சேதநனைத் திருத்துவது எவ்வாறு? அவனை நோக்கி இவ்வாறு பகர்வார்; அப்பா, நின் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு ஓரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடை செய்யப் பெறாத சுவாதந்திரியத்தை உடையவனாதலால், குற்றங் களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டு அறுத்து அறுத்து