பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

建擎 வாய்மொழியும் வாசகமும் நிலையை அட்ையும் பொழுதுதான் பயன் உண்டு. ஆகை யால் நுண்ணிலையில் உள்ளதாகிய உலகம் பரு நின்ல யில் தோன்ற வேண்டுவது இன்றியமையாததாயிற்று. இங்ஙனம் துண்ணிலையில் இருந்த உலகத்தை இப்பரு நிலையில் கொணர்ந்தவன் இறைவனாதலின் இவ்வுலகத் தைப் படைத்தவன் ஒருவன் உளன் என்பது பொருந்து வதாகின்றது. இதனால் நாம் தெளியும் பொருள் இது: தோற்றம்' என்பது காணப்படாத துண்ணிலையின் நீங்கிக் காணப்படும் பரு நிலையை அடைவது நிலை" என்பது, காணப்படும் நிலையில் இருத்தல் ஆகும்; *அழிவு என்பது காணப்பட்ட பரு நிலையின் நீங்கி முன் சோலக் கானப்படாத துண்ணிலையை அடைதல் ஆகும், இதனைச் சுருக்கமாக இல்லது தேன்றாது; உள்ளது அழியாது’ என்று கூறலாம். இதுவே சற்காரிய வாதத்தின் சுருக்கமாகும. சற்காரிய வாதத்தைச் சார்ந்து உள்ளது என்றும் அழிவதில்லை என்பதும் சொல்லப்படும். ஒரு மெழுகு வத்தி எரிவதால் இழப்பு ஒன்றும் இல்லை, Nothing is *3st when a candie is burnt என்ற வேதியியல் உண்மை யும் இதனை ஒத்ததாகும். இக் கூறிய கருத்தையும் தெளி விப்பேன். உள்ளது எக்காலத்தும் உள்ளதே அஃது என்றும் இல்லாதாதல் இல்லை. இங்ஙனமே,இல்லது எக்கா லத்திலும் இல்லதே, அஃது என்றும் உளதாதல் இல்லை. ஆகவே தோற்றம்' என்பதும் அழிவு என்பதும் அவற் கறையுடைய பொருள்களின் நிலைமாற்றங்களேயன்றி வேறல்ல. தோன்றி அழியும் நிலை காரிய நிலை என்றும் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நிலை காரண நிலை என்றும் வழங்கப்படும். இதனால், தோன்றுதல் என்பது காரண நிலையிலிருந்து காரிய நிலையை அடைவ தாகும்; அழிதலாவது, காரிய நிலையிலிருந்து, மீண்டும் காரண நிலையை அடைவதாகும். எ.கு, குடம் தோன் றிற்று என்பதில் அது மண் என்னும் நிலையிலிருந்து