பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔器 ಖtrುಡಿಚಿr¢48 Arಳಿāgà ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வ்ார் தமக்கு அறிவு மலராத காலத்தில் இராமபிரானைத் தோத்திரம் செய்யாது போனமைக்கு இரங்கி அழுகின்றார். தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாட்கள் எல்லாம்: - என்பது அவர்தம் திருவாக்கு. இந்தத் திருவாக்கினை உணர்வு இன்மையால், உணர்வு ஒன்றின்மையால், தெரிந்து உணர்வு ஒன்றின்மையால் என்று பொருள் காணல் வேண்டும். உடல் வேறு, ஆன்மாவேறு" என்ற ஞானமில்லாமையைக் கருதி உணர்வு இன்மையால்' என்றார். ஆன்மா எம்பெருமானுக்கு அடிமைப் பட்ட பொருள்; என்ற ஞான மில்லாமையை நினைந்து உணர்வு ஒன்றின்மையால்’ என்றார். பகவானுக்கு அடிமை” என்ற கொள்கைக்கு எல்லை நிலம் பாகவதற்கு அடிமை என்கின்ற ஞானமில்லாமையைத் தெரிந்து தெரிந்து உணர்வு ஒன்றின்மையால்' என்றார். இந்த உணர்வு நிலைகள் தம்பால் இன்மையால் தம்மைப் பாவியேன்” என்று சொல்லிக் கொள்ளுகின்றார். இந்த ஆழ்வாரின் திருவாய்மொழி ஆயிரமும் இறை வன் திருவடிகளில் கைங்கரியம் புரிய வேண்டும் என்ற பேரவாவினைப் பல்வேறு நிலைகளில் வெளியிடும் அழுகைத் திருப்பாசுரங்களாகும். செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் 37 fஅலற்றுவன்.கூவுகின்றேன்) Axvatþæ*** 36. பெரி. திருவந் 82 37. திருவாய் 1, 5; 7