பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 99 வைத்திருக்கிருர்கள். திருமதிற் சிற்பத்தில் கீழ்வரிசை ஆயில் ஒரு சிங்கம் அப்பரை இடுப்பளவும் விழுங்கி விட்டது போன்ற உருவம் ஒன்றும் அதன் அருகில் அப்பர் உருவமும் இருக்கின்றன. இந்த இரண்டை யும் படத்தில் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது கற்பனே தோன்றுகிறதா? நான் ஒன்று சொல்கிறேன்; சரியாயிருக்கிறதா என்று சொல்லுங்கள். இந்தச் சிற்பத்தை அப்பர் சுவாமிகள் வந்து குனிந்து பார்க் கிருர், அட பாவமே! இப்படியா கதை கட்டிவிட் டார்கள்? அட பாழும் கற்பனையே! என்று சொல் கிருர், சற்றே சிற்பத்தைக் கூர்ந்து பாருங்கள். அப்பர் இப்படிச் சொல்வதாகக் கூறுவதில் ஏதாவது பிழை உண்டா? நீங்களே சொல்லுங்கள். சிங்கக் கற்பனையைவிட இந்தக் கற்பனே சிறந்ததென்றே நான் எண்ணுகிறேன்.

  • இப்போது இந்த உருவத்தைச் செதுக்கி எடுத்து விட்டார்கள் .