பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாருங்கள் பார்க்கலாம் சென்ருர். ஆதியுலா என்ற நூலே அரங்கேற்றினர். இந்தச் செய்திகளில் ஏதாவது அந்தக் கேரளோல் பத்தியில் உண்டோ?’ என்று மறுபடியும் கேட்டேன் அப்படியெல்லாம் ஒன்னும் கண்டிட்டில்லை'." என்று அவர் கூறினர். . * அப்படியானுல் உங்கள் சேரமான் பெருமாள்' மெக்காவிலேயே இருக்கட்டும். இங்கே வரவேண் டாம். எங்கள் சேரமான் பெருமாள்நாயனுர் திருமுறை களில் இன்னும் வாழ்கிறர். சேக்கிழார் கூறும் பெரிய புராண வரலாறு எங்களுக்குப் போதும்' என்று. சொல்லி அவரை அனுப்பினேன், - r திருவஞ்சைக்களத்தின் திருவாசலில் கற்சுவரில் தலையில் பாகையுடனும் கையில் வாளுடனும் குதிரை யின்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்த சேரமான் பெருமாள் நாயனர் திருவுருவத்தைப் பார்த்தபோது, “நல்ல வேளை பெரியபுராணத்தைப் படித்துச் சேரமான் பெருமாள் குதிரையில் ஏறிக் கைலை சென்ற வரலாற்றைத் தெரிந்து கொண்டவர் கள் இங்கே பிற்காலத்திலும் இருந்திருக்கிருர்கள். அவர்கள் அமைத்த திருவுருவம் இதோ இருக்கிறதே!” என்ற ஆறுதல் பெற்றேன். - திருவஞ்சைக்களத்துக் கோயிலுக்குள் நடந்து கொண்டிருந்தோம். ஆலயம் பிற்காலத்தில் கட்டப் பெற்ற பகுதிகளே உடையது என்று நன்ருகத், தெரிந்தது. எல்லாம் மரத்தினலே அமைந்த பகுதி கள். மேலே ஒட்டுவில்லை. சில இடங்களில் பெரும் பாலும், மரத்திேைல மேற்கூரையை அமைத்திருக் கிருக்கள். கர்ப்பக்கிருகத்தின்மேல் உள்ள விமானத். தைச் செப்புத் தகடுகளால் வேய்ந்திருக்கிருர்கள்.