பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 வாருங்கள் பார்க்கலாம் பாடுவான்; கை கொட்டிச் சிரிப்பான்; அங்கே வேலை செய்பவர்கள் தம் வேலையைச் செய்யாதபடி வேடிக்கை காட்டுவான்; குதிப்பான்; ஒடுவான். மிகவும் வேலே செய்து இளேத்தவனைப்போல் உடம்பில் வேர்வை ஒழுக இரைக்க இரைக்க மூச்சு விட்டுக் கொண்டு, பசியுடையவனப்போல மறு படியும் வந்தியினிடம் வந்தான். வந்து, 'தாயே, கரை அடைபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சந்தான் எஞ்சியிருக்கிறது. எனக்கு அதற்குள் மிகவும் பசியாக இருக்கிறது. பிட்டுத் தா, சீக்கிரம்' என்ருன். - - - - அவள் அப்போதுதான் எடுத்த ஈட்டிலிருந்து சுடச்சுடப் பிட்டைத் தந்தாள். அதை அப்படியே சுடச்சுட வாயிற் போட்டுக்கொண்டு, இரண்டு கடை வாயிலும் ஒதுக்கிச் சூடாற்றி மெல்ல மெல்ல உண்டு மறுபடியும் வேலை செய்யப் போனன். போய் வாயை மென்று கொண்டே இருப்பான்; மிகவும் பலமுடையவனேப்போல மண்ணே வெட்டு வான். எடுத்த மண்ணக் கொண்டுபோய் வேறு ய்ங்கில் கொட்டுவான். உடைப்பு அடைபடுவதைக் கண்டு தன்தோளேக் கொட்டுவான். பக்கத்தில் நின்ற வர்களேத் தழுவுவான். மண்ணேக் கூடையில் எடுத்து இடறி விழுவான். ஆற்றிலே தடுக்கி விழுவான். மறுபடியும் நீந்திக் கரைக்கு வந்து கூடையை அடித்தடித்து ஈரத்தைப் போக்குவான். அப்படி அடிப்பதனுல் அதில் உள்ள்