பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 வாருங்கள் பார்க்கலாம் உடம்பைப் பார்த்தால் கூலி வேலே செய்தே அறி யாதவன் என்றல்லவா தோன்றுகிறது? கூலியையும் வாங்கிக்கொண்டு வந்தியின் ஆள் என்று பதிவும் செய்து கொண்டிருக்கிருன். இதை நாம் அரசனி டம் போய்ச் சொல்வோம்’ என்று எண்ணி அவர் கள் போய்விட்டார்கள். அரசன்முன் சென்று “மன்னர் பெருமானே, ஊரில் யாவரும் தம் பங்கை அடைத்துவிட்டார்கள். அந்தப் பிட்டு வாணிச்சி பங்கு மாத்திரம் அடைபடவில்லை. அவளுக்கு ஒரு கூலியாள் வந்திருக்கிருன் ஆளேப் பார்த்தால் மன்மதன் மாதிரி இருக்கிருன். அரசர் குடியிற் பிறந்த செல்லப்பிள்ளைபோல விளையாடுகிருனேயன்றி வேலை ஒன்றும் செய்யவில்லே. அவன் அழகைப் பார்த்த போது அடிக்க மனம் வரவில்லை. இங்கே வந்து சொன்னுேம்' என்ருர்கள். 'இது என்ன வியப்பாக இருக்கிறது ! நான் போய்ப் பார்க்கிறேன்’ என்று பாண்டியன் அமைச்சர் களோடு புறப்பட்டு வையைக் கரையை அடைந்: தான். அங்கங்கே கரை அடைபட்டிருப்பதைக் கண்டு சென்றவன் வந்தியின் பங்கை அணுகிக் கரை அடைபடாமல், வெள்ளம் ஒடுவதைக் கண்டு "இந்தப் பங்கின் ஆள் எங்கே ?’ என்று கேட் டான். அருகில் இருந்த இ ைற வ ன் கையைப் பிடித்திழுத்து வந்து, இவன்தான் வந்தியின் ஆள் என்று சிலர் காட்டினர். அவனேக் கண்டவுடன் பாண்டியன் சினம் மூண்டு தன் கையில் இருந்த பொற்பிரம்பினுல் அண்ட மும் அளவில்லாத உயிர்களும் தன் திருமேனியாகக்