20 வாருங்கள் பார்க்கலாம் அமைந்திருக்கின்றன. பிரமபுரீசர் கோயில் விமானமும் இந்தக் கோயில் சுற்றுப் பகுதியும் ஒட்டியிருக்கின்றன. திருமலையில் ஞானசம்பந்தப் பெருமானுடைய தந்தை பார் கை பி. ற் கோலொடு நிற்க அந்தக் குழந்தை தோணிபுரேசரைச் சுட்டிக் காட்டுவது போன்ற சுதைச் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த மலே கைலாய மலேயின் சிகரத்தின் சின்ன மென்றும் அந்தச் சிகரத்தை இருபது பறவைகள் தாங்கி நின்றன என்றும் புராணம் சொல்கிறது. இந்தச் செய்தி அப்பர் காலத்திலும் வழங்கியிருக் கிறது. அவர் பாடிய பாசுரத்தில், பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுகின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் களிர்மதியம் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடும் கழுமலவர்க்கு ஆளன்றி மற்றுமுண் டோஅக்தண் ஆழி அகலிடமே என்று இச்செய்தியைக் குறிப்பிடுகிருர். இப்போது உள்ள புராணத்தை இயற்றியவர் இராம நாடகக் கீர்த்தனத்தைப் பாடிய அருணாசலக் கவிராயர். அவர் வட்மொழியிலுள்ள புராணங்களே அறிந்து இப் புராணத்தைப் பாடினர். அவர் கி.பி. 1712 முதல் 1779 வரையில் வாழ்ந்தவர். இந்தப் புராணம் உண்டாவதற்கு முன்பே இத் “ਨ਼ਗ਼ਾ ਾਂ ੇ .ெ அகலிடம்-அழகிய குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமி. --