பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 வாருங்கள் பார்க்கலாம் நான் பாண்டியனிடம் சொல்லி வெற்றி பெற்ருல் என்னே உங்களுள் ஒருவகைச் சேர்த்துக்கொண்டு எனக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்’ என்று சொன்னுராம்.முந்நூற்றுவர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டனர். தங்கள் வழக்கு வென்றவுடன் முதியவருக்குரிய பங்கை வழங்க எண்ணியபோது, 'எனக்கு நிலம் எதற்கு ? நீங்கள் வைத்துக் கொண்டு நாளுக்கு ஒரு வீடாகச் சாப்பாடு போட்டு வாருங்கள்’ என்ருர். அப்படியே அவர்கள் செய்தார்கள். அவர்கள் வீட்டில் புழுங்கலரிசி வடித்துக் கீரையைச் சுண்டிப் பாகற்காய் உப்புச்சாறு வைத்து அவருக்கு உண வளித்தார்கள். "நான் உங்கள் குழந்தைகளுக்கு வேத பாடம் சொல்லித் தருகிறேன்’ என்று சொல்லி மறை பயிற்றுவித்தார். குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது அவருக்கு வழக்கம். ஒருநாள் கண்ணுமூச்சி விளே யாட்டு ஆடினர்கள். கிழவர் கண்ணேத் துணியால் கட்டி, சுற்றிலும் பையன்கள் ஓடினர்கள். கிழவர் எல்லாரையும் தொட்டுவிட்டார். பிறகு குழந்தைகள் அத்தனை பேர் கண்ணேயும் கட்டி விட்டுத் தம்மைத் தேடச் சொன்ஞர். அவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டவுடன் அவர் மறைந்தார். கண்ணேக் கட்டிக் கொண்டவர்கள் தேட முடியாமல் கட்டை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவரைக் காணவில்லே. அதைத் தம்முடைய தந்தையாரிடம் வந்து சொன்னர்கள் பிள்ளைகள். உண்ணும் நேரமாகிவிட்டது. சிலர் உண்டுவிட்டு