பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 வாருங்கள் பார்க்கலாம் இதற்கு அடுத்தது அர்த்த மண்டபம், அதற்குச் சித்சபை என்று பெயர். அடுத்தது ஆத்மநாதர் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக் கிருகம். அதை ஆனந்த சபை என்றும் ஆத்மநாத மண்டபம் என்றும் சொல் கிருர்கள். . ஆத்மநாதர் பீடத்தில் அருவமாக எழுந்தருளி யிருக்கிருர். மேலே குவளை சாத்தி அலங்காரம் செய் கிருர்கள். . இந்த ஆலயத்திலுள்ள மண்டபங்களும் சபை களும் சிற்பங்களும் தீபங்களும் மிக விரிவானவை. சைவ சித்தாந்த சா ஸ் திர த் தி ல் சொல்லப் பெரும் ஆறு அத்துவாக்களும் ஆறு தீபங்களாக இங்கே இருக்கின்றன. ஒவ்வொன்றையும் கவனித் தால் அத்துவாக்களுக்கும் தீபத்துக்கும் உள்ள பொருத்தம் நன்ருக விளங்கும். சிற்ப உருவங்களில் எதை உயர்வென்று சொல் வது ? தூணுக்குத் தூண் உயிர்ச் சிற்பங்கள் நிற்கின் றன. நுட்பமான வேலைப்பாடுகளும் பல கருத்துக் களே உள்ளுறையாகக் கொண்ட திறமும் கூர்ந்து ஆராய ஆராய வியப்பை ஊட்டும். அன்புருவாக உள்ள மாணிக்கவாசகர் இங்கே நாம் வழிபடும்படி பல உருவங்களில் நிற்கிருர். பல நிலையில் அவரைப் பார்க்கிருேம். தத்துவங்களேச் சிற்பி வடித்திருக்கிருன். புராண வரலாற்றைக் கல்லிலே ஒவிய மாக்கியிருக்கிருன். சரித்திர புருஷர் களே அங்கங்கே சிலேயுருவிலே காட்டியிருக்கிருன். எங்கே பார்த்தாலும் சிற்பக் கலைத்திறம் களிநடம் இடுகின்றது.