பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 317 இந்த ஆ ல ய த் து க் கு வந்தால் மாணிக்க வாசகரை வழிபட்டு அன்பிலே கரைந்து உருகலாம். அருவ நிலையிலுள்ள ஆத்மநாதரையும் சிவயோக நாயகியையும் தரிசித்துத் தியானத்திலே மூழ்கலாம். வீரபத்திரரை வணங்கி வேண்டிக் கொள்ளலாம். சாஸ்திரத்தை நினைப்பூட்டும் உருவங்களைக் கண்டு ஞான நூலாராய்ச்சியிலே புகலாம். சிற்பச் செல்வங் களைக் கண்ணுரக் கண்டு நாள் கணக்காகப் பொழுது போக்கி இன்புறலாம். அந்த இன்பத்தைச் சாதி சமய வேறுபாடு இல்லாமல் யாவருமே பெறலாம். ஆம்; இக்கோயில் ஒரு பெரிய சிற்பக் கருவூலம்.