பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாருங்கள் பார்க்கலாம் அங்கே அழைத்துச் சென்ருர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணக் கோலத்தோடு காட்சி தரும் அழகிய படம் ஒன்றை அங்கே வைத்துப் பூசித்து. வருகிருர்கள். பெரிய புராணத்தில் சம்பந்தப் பெருமான் கோயிலுக்கு அருகில் ஒருமடத்தில் புகுந்து திருமணக் கோலம் புனேந்ததாகச் சேக்கிழார் பாடுகிருர்; காதரைப் பணிந்து போற்றி கற்பொருட் பதிகம் பாடிக் காதல்மெய் அருள்முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து வேதியர் வதுவைக் கோலம் புனைந்திட வேண்டும் என்னப் பூதநா பகர்தம் கோயிற் புறத்தொரு மடத்திற் புக்கார் - என்று சொல்லும் பாட்டில் இங்கே ஒரு மடம் இருந்த தாகச் சொல்கிருர். அதை நினைந்து இந்த மடம் எழுந்தது. நீலநக்கர், முருகநாயனர் முதலிய நாயன் மார்கள் எழுந்தருளிய மடம் இது. இப்போது...... دچ و அவர் இன்னது சொல்லப் போகிருர் என்று ஊகித்துப் பேச்சை மாற்றினேன். அவர் எங்களே உள்ளே அழைத்துச் சென்ருர். அங்கே ஒரு முற்றம். அதில் ஒரு ரோஜாச் செடி. அதில் அன்று ஒரு மலர் மலர்ந்திருந்தது. - 'ஆண்டவன் திருவருளே என்னென்று சொல்: வேன்! உங்களை இந்த மலர் வரவேற்கிறது. இதுவே. முதற்பூ. உங்களைக் கண்டு மலர்ந்த பூ” என்றர்