இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொள்ளிவைக்கும் மனப்பான்மை கூடா தென்றும்
- குறுக்குவழி தீதெ' என்றும் , இரவில், வெள்ளிப் புள்ளிவைக்கும் வானத்தின் மீது தோன்றும்.
புதுநிலவை, அப்பளந்தான் நீயோ!' என்றும் ; வள்ளுவனை இவ்வுலகில் வாழ வைக்க
வந்தபித்தன் நானென்றும் பாடிக் காட்டி அள்ளிவைத்துக் கொள்வோரை அதட்டு கின்ருர்.
அறம்பொருளே இன்பத்தை வாழ்த்து கின்ருர்.
சந்தனத்தை வைப்பதற்குக் கிண்ண முண்டு ; தயிரதனை வைப்பதற்குப் பானை யுண்டு ; வெந்தயத்தை வைப்பதற்குக் கலய முண்டு ;
வெற்றியினை வைப்பதற்குத் திசைகள் உண்டு ; சிந்தனைச்சந் தனக்கிண்ணம் என்னும் இந்நூல்,
தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகள் காட்டிப் பந்தயத்தில் வெற்றிபெறும்! எனவே இந்தப்
பாடலுக்கும் புகழுலகில் வரவேற் புண்டு 1
கவிஞர் ஐ. உலகநாதன் அவர்கள் எழுதியசந்தனக் கிண்ணம்’ என்னும் கவிதை நூலுக்கு 1966-இல் வழங்கிய அணிந்துரை.
36.