பக்கம்:வார்த்தை வாசல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணிப்பொன் போற்சிறந்து விளங்கி நின்ற

அமிர்தகவி ராயர் யார்? என்று கேட்டால், நாணிக்கண் புதைத் தலெனும் ஒருது றைக்கே நானூறு பாட்டெழுதிப் பிறரை வென்ற மாணிக்கப் புலவரவர்; செய்த நன்றி. -* மறவாத புலவரவர். அவர்பேர் தன்னைத் துரணுக்குத் துரணெழுதி வைக்கச் சொல்லும்

தோழர்களுள் ஒருதோழர் சோதி வாணன்.

வான்மதிக்கும் செங்கதிரைப் போன்று, தோகை

மயில் மதிக்கும் மேகத்தைப் போன்று, நாட்டில் நான்மதிக்கும் கவிஞர்களுள் ஒருவ ரான -

நற்கவிஞர் சொற்கவிஞர் சோதி வாணன், ஊன்மதிக்கும் உயிர் போன்று சிறந்த தான - ஒற்றையடிப் பாதையெனும் கவிதை நூலைத் தேன்மதிக்கும் செந்தமிழில் தீட்டி யுள்ளார் ;) தீட்டியதில் புதுமைபல காட்டி யுள்ளார்.

37. 2767–3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/39&oldid=645749" இலிருந்து மீள்விக்கப்பட்டது