இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
படைகாக்கும் தமிழ்வீரம் வேண்டு மாயின்
பரணிதனைப் படியுங்கள்; சிறந்த செய்யுள் நடைகாக்கும் அமைப்புமுறை வேண்டு மாயின்,
நைடதத்தைப் படியுங்கள்; வினவுக் கேற்ற விடைகாக்கும் பேரறிவு வேண்டு மாயின்,
வேதாந்தம் படியுங்கள்: புதுமை தன்னே அடைகாக்கும் சிந்தனைகள் வேண்டு மாயின்,
அப்துல்ரஹ் மான் நூலாம். இந்நூல் போதும்.
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய நேயர் விருப்பம்’ என்னும் நூலுக்கு 1977 -இல் வழங்கிய அணிந்துரை. -
47