இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னருகில் எப்போதும் புத்த கங்கள்
இருப்பதொடு நண்பர்களும் இருப்ப துண்டு. பொன்னதனக் கேட்டாலும் தருவே னன்றிப்
புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன். கன்னியரைப் புத்தகத்தை இரவல் தந்தால் ே கசங்காமல் விடுவந்து சேர்வ தில்லை ; ` என்பதனால் தருவதில்லை. யார்து லாக
இருப்பினும்நான் அதைப்படிக்கா திருப்ப தில்லை.
பொழுது(நன்கு) புலர்ந்ததெனும் நூலை, அந்திப்
. பொழுதில் நான் வாசித்தேன். இந்த நூலை எழுதியவர் என்நண்பர் பட்டுக் கோட்டை
- இராசேந்திரன் எனும்கவிஞர் : பாவின் வேந்தர் குழுவினிலே இடம்பெற்ற கவிஞர். மூடக்
கொள்கையினக் கண்டிக்கும் எங்கள் கூட்டம், முழுநிலவின் அருகிலுள்ள விண்மீன் கூட்டம்.
மூத்தவன் நான். இவரிளைஞர். கெட்டிக் காரர்.
51