பக்கம்:வார்த்தை வாசல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: பகலுக்கே விடைகொடுப்போம் வயது வந்த

பால்நிலவைத் துணைக்கழைப்போம்! ஆங்கி ருக்கும்

அகல்விளக்கின் ஒளிமழையில் நனைந்து கொண்டே

- அனைத்துசுகம் நாம்பெறுவோம்' என்னும் பாடல்,

முகத்தோடு முகம்சேர்த்து முத்த மிட்டு

முத்தமிடும் போதில்புருச் சத்த மிட்டுச்

சுகத்தோடு சுகம்சேர்க்க விரும்பு வோர்க்குத்

துாண்டுகோல் போலமைந்த பாட லாகும்.

ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்க் காலம்.

அக்காலம் வந்துற்ருல், முகில்கள் என்னும் தெப்பங்கள் வானத்தில் மிதக்கும் தண்ணிர்

தெளிவடையும் அத்தகைய தெளிந்த நீர்போல் எப்பொழுதும் மிகத்தெளிந்த நடையில் பாக்கள்

இயற்றுமிவர் இதனையும் நன் கியற்றி யுள்ளார். பொய்ப்புழுக்கம் சிலநூலில் இருக்கும்; இந்தப்

புத்தகத்தில் அத்தகைய புழுக்க மில்லை.

கவிஞர் வேலூர் ம. நாராயணன், எம். ஏ., அவர்கள் எழுதிய

'நிலாமுற்றம்’ என்னும் கவிதை நூலுக்கு 1982-இல் வழங்கிய அணிந்துரை.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/61&oldid=645793" இலிருந்து மீள்விக்கப்பட்டது