இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காவியமும் ஒவியமும் தீட்டித் தந்து
கலீல்கிப்ரான் புகழ்பெற்ருர். வெர்டி என்பார்
ஒவியமும் காவியமும் தந்த தாலே
உறங்காத புகழ்பெற்ருர். முத்து விரப்
பாவலரின் மூத்தமகன் வைத்ய லிங்கம் -
பாட்டெழுதிப் படம்வரைந்து பெருமை பெற்ருர்
சேவைசெய்த நாமக்கல் ராம லிங்கம்
சிறப்புற்ருர் ஒவியத்தால் காவி யத்தால்.
அத்தகையோர் போன்றவராம் என்றன் நண்பர் அமுதபா. ரதியென்பார், நமது நாட்டில் சித்திரங்கள் வரைவதிலும், சந்தத் தோடு
செய்யுள்கள் புனேவதிலும் சமர்த்த ராவார். புத்தகமே இவருடைய சொத்தாம். பொங்கும்
புதுமைகளே இக்கவிஞர் மதிக்கும் முத்தாம். சித்திரங்கள் இவருக்குச் சோறு போடும்.
ச்ெப்யுள்கள் இவர்க்குரிய புகழை நாடும்.
62