மண்கொடுத்தும் பொன்கொடுத்தும் ஆத ரித்த
மாமில்ல புரத்துவள்ளல் செவந்தா னுக்கோ பண்பட்ட கவிராயன் ராமச் சந்த்ரன்
படைத்திட்டான் கோவையெனும் பிரபந் தத்தை பெண்கொடுத்த மாமனுக்கே இந்த நூலைப்
பெருங்கவிஞர் காணிக்கை யாக்கி யுள்ளார் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டும் இந்தப்
பாவலனைத் தனித்தமிழால் வாழ்த்து கின்றேன்.
எல்லாம்நன் கறிந்தஇந்து தேசம் ஆனல்
இப்போதோ நிலைமைமிக மோசம் என்று பல்லாண்டு கட்குமுன்பே பாடி யுள்ளார்
பாஸ்கரதாஸ் எனும்கவிஞர் இந்தி யாவின் எல்லையென இருப்பதுவும் கரையே, இங்கே
எல்லாமாய் இருப்பதுவும் கறையே என்று பல்லவிக்கோர் பல்லவியைப் போன்று குட்டி
பாஸ்கரதாஸ் எனுமிவரும் பாடி யுள்ளார்.
வள்ளுவரோ பிறைநிலவை அறுவாய்' என்ருர்
மற்றிவரோ மொட்டுநிலா எனச்சொல் கின்ருர்கள்ளருந்திப் பாழ்பட்ட கம்ப தாசன்
கயல்விழியை வானத்தின் வாசல் என்ருன் பள்ளியறைக் காதலியின் விழியை இந்தப்
படைப்பாளர் கனவுகாணும் மீனென் கின்ருர், தெள்ளுதமிழ்க் கவிஞர்களே கேளிர் தண்ணிர்த்
சேவைன்ருே அதோதெரியும் தீவென் கின்ருர்.
'4