கண்ணகியும் அன்றழுதாள்: கவிஞர் கோமான்
கம்பர்மகள் காவிரியும் அழுதாள், ஆங்கோர் பெண்ணரசி பத்மினியும் அழுதாள் தோழிப்
பெண்ணழுதாள் நாமதனைப் பார்க்க வில்லை கண்ணிமைகள் அடைகாக்கும் முட்டை உப்புக் -
கண்ணிரென் றெடுத்துரைக்கும் இவர்க்கு நாமோ எண்ணுாறு கோடிப்பொன் தரலாம் பாரி
இன்றில்லை இருப்பினவன் கொடுத்தி ருப்பான்.
ஆடகப்பொன் அம்பொன்னம் கரிகாற் சோழன்
அரண்மனைப் பொன்துளைப் பொன்னம் பாவின்வேந்தர் நாடக நூல் பலவற்றை ஆய்வு செய்த
நற்கவியின் நூலிதுவோ ஆணிப் பொன்னம் மூடமதி கண்டனமென் ருேர்நூல், பாட்டு முத்திரையா லாகிய நூல் அந்த நூலேக் கோடையிடிக் கொப்பிட்டால் இதைநான் பாபர்
கொண்டுவந்த பீரங்கிக் கிணையாய்ச் சொல்வேன்.
சீர்காழி கண்ணுடைய வள்ளல் என்பார்
தீட்டிய நூா லாம்ஒழுவில் ஒடுக்கம் என்னும் பேர்பெற்ற நூலதன இராம லிங்கப்
பெருந்துறவி எடுத்தெடுத்துப் படிப்ப துண்டாம். -ஏர்நடத்தும் தமிழகத்தில் உள்ளோ ரெல்லாம் . - இந்நூலே எடுத்தெடுத்துப் படிப்பா ராயின்
சீர்பெறலாம் சிறப்புமிகப் பெறலாம் நன்கு
சிந்திக்கும் ஆற்றலையும் பெறலாம் என்பேன்.
சு. வ. எழிலரசு, எம்.ஏ. அவர்கள் எழுதிய இன்னொரு விடுதலை’ என்னும் நூலுக்கு 1984-இல் வழங்கிய அணிந்துரை.
76