பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷7慈 வாழும் கவிஞர்கள் கவிஞரின் உலக நோக்கு இவற்றில் வெளியாகின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ராஜாவைப் பற்றி ஏழு வெண்பாக்களைப் பாடியுள்ளார். இந்த வெண்பாக்களின் முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழும், இறுதி எழுத்துக்களைக் கீழிறிந்து மேலுமாகப் படித்தால், குமாரசாமி ராசா என்ற பெயர் வருமாறு அமைத்திருக்கும் கவிஞரின் பாப்புனையும் திறன் பளிச்சிடுவதைக் காணலாம். மொழி வெறி இல்லாமல் அனைத்து மொழிகளையும் கற்றுத் தமிழில் கவிதை புனையும் ஒருவர்-தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் அரிய மனிதர்-ஏன்? முடியரசனைப் போல ஒருவர்-நம்மிடையே வாழ்வது நமக்குப் பெருமை அளிக்கின்றது. சிறிதளவும் தன் முனைப்பின்றிச் சாந்த மூர்த்தியாக இருப்பது நம்மை மேலும் மகிழ்விக்கின்றது.