124
‘வாழையடி வாழை’
அடுத்து வடிவத்தைப் பார்க்கும் பொழுது கவிஞர் ஆசிரியம், அறுசீர்க்கழிநெடிலாசிரியம், விருத்தம், எண்சீர் விருத்தம், கானல்வரிச்சந்தம். கிளிக்கண்ணி, வண்ணம், சிந்து, காவடிச் சிந்து முதலிய பல பா வகைகளைப் பாடியுள்ளார்.
கானல் வரிச்சந்தம் காண்போம்;
முகிலப் பற்றி,
'‘கடலுடல் தொடுபவளே!
கருவொடு வருபவளே!
நெடுமலை துயில்பவளே!
நிதிதரு மலைமகளே!
இடையிடை யிடியுடனே
இருள்நிற எழிலுடனே
கொடு வெயில் துயர்கெடவே
குளிரொடு வந்தனையே!”
என்கிறார். அடுத்தது ஒரு கிளிக்கண்ணி:
'‘மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும் — கிளியே!
போவா ரடிவழுக்கும்!”
அடுத்து வண்ணம்:
'“மாலை அந்தியிலே — மலை
வாழும் தென்றலிலே — தெரு
வாசல் முல்லையின்
வாசம் வந்ததும்
ஆசை கொண்டன வண்டுகள் யாவும்
ஆவேசமாகமலர் ஊதவே.’
'இளவேனில்' என்னும் கவிதையில் 'சிந்து' நடை போடுகிறது.
'‘சங்கத் தமிழ்மதுரை — நகர்
தாண்டித் தவழ்ந்துவரும்