உவமைக்கவிஞர் சுரதா
131
'திருமுகம்போ லவிழ்ந்த தாமரை'
என இலக்கியத்தில் வருவது போன்றதிது.
இறுதியாகக் கவிஞர் சுரதா அவர்களின் தமிழ்ப் பற்றினைக் கூறிமுடிக் கின்றேன்.
தேன்பிறந்த பின்மலர்கள் பிறப்பதில்லை;
திசைபிறந்த பின்வானம் பிறப்ப தில்லை;
மீன்பிறந்த பின் குளங்கள் பிறப்பதில்லை;
வேல்பிறந்த பின் இரும்பு பிறப்ப தில்லை;
தேன் சுரக்கும் தமிழ்பிறக்கும் முன்பே, மற்றத்
தேசத்தார் பேசுமொழி பிறக்க வில்லை;
வான்பிறக்கு முன்காற்றுப் பிறந்த துண்டோ?
வையகத்தில் தமிழ்போலும் சிறந்த துண்டோ?”
'மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காணின்
மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்;
தீந்தமிழ் போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை'
இவ்வாறாக. இன்று வாழும் கவிஞர்களில், சுரதா அவர்கள் செம்மை சான்ற கவிஞராய்த் துலங்கி வருகின்றார்கள்.