இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43
மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேளையில் உலகில் மற்றவர்களும் பிற உயிர்களும் எப்படி இருக்கின்றனர் என்பதை உன்னுல் முடியுமானல் நினைத்துப் பார். இன்று நம் உலகில் எல்லாரும் சுகமாக வாழ வில்லை என்பது உனக்குத் தெரியும், இன் றில்லா விட்டாலும் என்றைக்காவது அவர் களுக்கு உதவி செய்ய முடியுமா என்று நினை. இன்று முடியாவிட்டாலும் உன் எண்ணம் திண்ணமையாகி என்றைக்காகி லும் பயன் தரும், தம்பி! இதோ உன் னைப் படுக்கவிட்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன். தம்பி! உன்னைப்போல் உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் நினைத்து உலகமும் அதில் வாழும் உயிர் களும் என்றும் நல்லபடி வாழ முயற்சி செய்யவேண்டும். அந்த எண்ணம். நினைவு-திண்மையாகும். உங்கள் தமிழ்ப் பாடடன வளளுவன, -
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப் பெறின் என்ருன்,