பக்கம்:வாழ வேண்டுமா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்க்கிறது. ‘எழுந்திருங்கள், எழுந்திருங்கள்’ என்று கூப்பிடுவது போல உரக்கக் குரலெடுத்துத் கூவுகின்றது. அந்த ஒலிக்குப் பிறகுதான் உலகமே விழித்துக் கொள்ளுகிறது என்னலாம். பிறகு ஒவ்வொரு பிராணியாகத் தன்னுடைய உறக்கத்தை விட்டு எழுந்து தத்தமது வேலைக்குப் புறப்படும். ஆம்! உன் பெற்றோரும், பிறரும் பிறகேதான் எழுந்து தம்முடைய வேலைகளைக் கவனிப்பார்கள். நீயும் அவர்களோடு, கோழி கூவ எழுந்திருந்தால் நல்லதுதான். என்ன? எழுந்திருக்கிறாயா? நல்லது! முயற்சி செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/5&oldid=1542196" இலிருந்து மீள்விக்கப்பட்டது