பக்கம்:வாழ வேண்டுமா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும் ஒவ்வொருவரும் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘வாழ வேண்டாமா?’ என்று கேட்டால் யாராவது வேண்டாம் என்பார்களா? நீயே நன்றாக யோசித்துச் சொல். ஒருவரும் சொல்ல மாட்டார்கள் அல்லவா? எத்தனை வயதானவரானாலும் இன்னும் சில நாள் வாழ மாட்டோமா என்றுதான் நினைப்பார்கள். ஆம்; அவ்வாறு நினைப்பது தவறு என்று சொல்ல மாட்டேன். எப்போது? அப்படி வாழும் அத்தனை நாளையும் வீணாக்காது ஒழுங்காகப் பயன் படுத்தினால்தான். இதோ பள்ளிக்கூடத்தில் படிக்கும் உனது ஒரு நாளின் செயல்கள் ஒருவாறு ஒழுங்கு படுத்தப்பட்டன அல்லவா? அது போலவே உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் செய்ய வேண்டிய ஒழுங்கு முறை யான காரியங்கள் உள்ளன. மனிதனுக்கு மட்டுமென்ன! விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடத்தாம் அன்றாடம் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/7&oldid=1542201" இலிருந்து மீள்விக்கப்பட்டது