பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வாஷிங்டனில் திருமணம் o 'தோட்டத்திலே விழப் போகிற பந்தி இலைகளை யாவது இந்தக் காக்காய்தள் சாப்பிடுகிறதோ, இல்லையோ?” என்று கவலைப்பட்டார் சாஸ்திரிகள். 'அதற்குத்தான் நரிக்குறவர்கள் வரப் போகிறார்களே: என்றார் அம்மாஞ்சி. - 'உஷ் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசாதேயும். ராக்ஃபெல்லர் மாமியிடம் அவர்களெல்லாம் பெரிய மகாராஜாக்கள் என்று சொல்லி வைத்திருக்கிறேன் நான் என்றான் பஞ்சு. "ஆமாம், அவர்களைப் பற்றி எதற்காக அப்படி ஒரேயடியாய் கப்ஸா அளந்து விட்டீர்?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. "அவர்கள் எச்சில் இலை சாப்பிடுகிறவர்கள் என்றால் நம் நாட்டுக்குத்தானே கேவலம்? அதற்காகத்தான் அப்படி கெளரவமாகச் சொல்லி வைத்தேன். ' 'அவர்கள் இங்கே வந்து தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டால்?...' "கவலைப்படாதேயும். அதெல்லாம் முன் ஏற்பாடாக பாப்ஜியிடம் சொல்லி வைத்திருக்கிறேன். நரிக்குறவர்கள் இங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் அவர்களுக்குப் பாடம் சொல்லி அனுப்புவான். ஆயிரம் பேரையும் இங்கே வேளா வேளைக்கு தனிப் பந்தியில் உட்கார வைத்துச் சாப்பாடு போடப் போதிறேன். ராக்ஃபெல்லர் செலவழிக்கச்சே நமக்கென்ன கவலை: என்றான் பஞ்சு. 'காட்டன் ஸ்ாரா, கொக் கோன்னானாம்! தெரியாமலா ராக்ஃபெல்லர் மாமி எதுக் கெடுத்தாலும் பஞ்ச் பஞ்ச்iன்னு தொளைச்சு எடுக்கிறா?"என்றார் சாஸ்திரிகள்.