பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையிலிருந்தே கல்யாண வீட்டில் பரபரப்பா யிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காஸ் லைட்டுகள் உஸ்ஸ் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன. - - 'காட்டன் ஸாரை எங்கே காணோம்?' என்று கேட்டார் அம்மாஞ்சி. 'ஹாலிவுட்டிலிருந்து சினிமா ஸ்டார்ஸெல்லாம் வருகிறார்களாம். ஏர்போர்ட் போயிருக்கிறார்' என்றார் அய்யாசாமி. அந்தச் சேதியைக் கேள்விப்பட்ட அம்மாஞ்சி வாத்தியார், 'அடாடா தெரிந்திருந்தால் நானும் ஏர்போர்ட்டுக்குப் போயிருப்பேனே' என்றார். 'இந்த நியூஸெல்லாம் நம்மிடம் யாரும் சொல்ல மாட்டார்கள். வைதிகாள் தானேங்கற அபிப்பிராயம்' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.