பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வாஷிங்டனில் திருமணம் | "ஆசீர்வாதத்தின்போது வந்து குவிந்த ப்ரஸண்ட்டு: களைப் பார்த்தீரா? எத்தனை ரிஸ்ட் வாட்ச் எவ்வளவு வெள்ளிப் பாத்திரம்? எத்தனை டிரான்ஸிஸ்டர்' என்று வர்ணித்தார் மற்றொரு சாஸ்திரிகள். 'உம்; நமக்கெல்லாம் என்ன செய்யப் போகிறாளாம் என்று கவலையோடு விசாரித்தார் வேறொருவர். 'தலைக்கு நூறு டாலர்னு பேசிக்கிறா?' என்றார் கனபாடிகள். 'கைக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் இல்லையா? என்று கேட்டார் மற்றொருவர். 'காட்டன் லார் மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்: என்றார் இன்னொருவர். 'மயிலாப்பூர் சாஸ்திரிகளே ஒரு ரவுண்டு த்ரீ நாட்போர் போடுவோமா?' என்று கேட்டார் மாம்பலம் கனபாடிகள். 'அதுக்கு முன்னாலே ஒரு ரவுண்டு வெற்றிலைச் சீவலைப் போடலாம்!' என்றார் திருவல் லிக்கேணி தீட்சிதர். 'இது வாஷிங்டன் நகரம். திருவல்லிக்கேணி இல்லை. கண்ட இடத்திலே துப்பக் கூடாது' என்றார் மாம்பலம் கனபாடிகள். சம்மர் ஹவுஸில், பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். - . 'மணி மூன்றாகிறதே, நலங்குக்கு நேரமாகல்லையா?" என்று பொதுவாக இரைந்து கொண்டே போனார் அய்யாசாமி ஐயர். - 'இன்னும் ப்ளேன் வரவில்லையாம். புஷ்பத்துக்காகக் காத்திருக்கிறோம்!' என்றாள் அத்தை.