பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாஷிங்டனில் திருமணம் 'ஏண்டாப்பா, காவிரிக் கரை மாதிரி படித்துறை இருக்குமோ?' என்று கேட்டாள் அத்தை. 'இல்லைன்னா கட்டிக் கொடுக்கச் சொன்னா போச்சு, இதென்ன பிரமாதம்?' என்றார் மூர்த்தி. 'அப்பளம் இட்டு உலர்த்துவதற்கு நல்ல மாடியா வேணுமேடா!' என்று கவலைப்பட்டாள் பனாரஸ் பாட்டி. 'நீங்க வாஷிங்டனுக்கு வந்து பாருங்கோ பாட்டி! அங்கே உங்களுக்கு எந்தக் கட்டடம் செளகரியமா இருக்கும்னு பார்த்துச் சொல்லுங்கோ. அதைக் காலி பண்ணிக் கொடுத்துவிடச் சொல்கிறேன்' என்றார் மூர்த்தி. 'ரொம்ப உயரமான கட்டடமா இருந்தா அடிக்கடி மொட்டை மாடிக்குப் போறத்துக்குக் கஷ்டப்படுமே..." "அதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அப்பளம் இட்டு முடிக்கிற வரை தனி லிஃப்ட் வேலை செய்யும். அந்தக் கட்டடம் பூராவையும் அப்பள டிபார்ட் மெண்டுக்காகவே ஒதுக்கிவிடச் சொல்கிறேன், போதுமா?" “எதேஷ்டம்...' என்றாள் பாட்டி. அன்று மாலையே திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற விமானம் வாஷிங்டனை நோக்கிப் பறந்தது. பால்காட் லல்லிதான் ஏர்ஹோஸ்ட்டஸ்! 'வாஷிங் சோடாவுக்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேரும்டி?" என்று லல்லியைக் கேட்டாள் பாட்டி. லல்லி சிரித்துவிட்டு, "வாஷிங் சோடா இல்லை பாட்டி வாஷிங்டன் பார்த்துண்டே இருங்கோ, இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியப் போகிறது!" என்றாள்.