பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 89 மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா, மிஸஸ் மூர்த்தி, லல்லி, அமெரிக்க பெண்டுகள் எல்லோரும் ஒரு வரிசையில் உட்கார்ந்து கொண்டனர். அய்யாசாமி, மாமா, அத்தை, பனாரஸ் பாட்டி முதலானோர் இன்னொரு வரிசையில் உட்கார்ந்து கொண்டனர். அம்மாஞ்சி வாத்தியாரும், சாஸ்திரிகளும் சந்தடி செய்யாமல் சமையல் கட்டுப் பக்கம் போய் ஆசாரமாக உட்கார்ந்து கொண்டார்கள். அப்பளப் பாட்டிமார்களுக்குத் தனிப் பந்தி போடப்பட்டிருந்தது. - "முகூர்த்தமே வைத்தாகவில்லை. இதற்குள் வேளைக்கு ஐந்நூறு இலை விழுகிறது. இப்பவே இப்படின்னா கல்யாணத்தின் போது கூட்டம் எப்படி இருக்கப் போகிறதோ!' என்று கவலைப்பட்டார் சாஸ்திரிகள். 'கோடீசுவரப் பிரபு ராக்ஃபெல்லர் இருக்கார், செலவழிக்கிறார். உமக்கென்ன கவலை?" என்றார் அம்மாஞ்சி. "இந்த மாதிரி நாலு கல்யாணம் செய்தால் கோடீசுவரப் பிரபுவாயிருந்தாலும் இன்ஸால் வென்ஸி கொடுக்க வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் செலவழிப்பா. கடைசியிலே வைதிகாளிடம் வரபோது கை இழுத்துக் கொள்ளும் என்றார் சாஸ்திரிகள். "அதெல்லாம் இல்லை. ஆயிரம் வைதிகாள் வந்தாலும் அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஐந்நூறு டாலர் கொடுக்கப் போறாளாம்" என்றார் அம்மாஞ்சி. - 'இன்னும் கொஞ்சம் ரவா புட்டிங் போடு' என்று உப்புமாவை : ரொம்பவும் ருசித்துச் சாப்பிட்டாள்