பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தலைவர் உரை


செத்துவிட்டான் கட்டபொம்மன் என்றிருந்தோம் மீண்டும்

பெற்றுவிட்டார் இந்தச் சிற்றம்பலம், வாழ்க நன்று

     [அவ்வழியில்

அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெறுதற்கு அன்னையர்கள்

     இருக்கின்றார்.

எடுத்தணைத்து மகிழ்ந்திடவே ஆவலுடன் நிற்கின்றோம்

கெடுதலையைத் தருகின்றன அடிமை நீங்கி

விடுதலையைப் பெறுவதற்கு என்மகனே

கொடு தலையை எனச்சொன்னான் அன்னையென்று

கொடுத்து விட்ட புலிமக்கள் மருதிருவர்

தொடுத்துவிட்ட சுதந்திரப் பூமாலையிலே மணமானார்

விடுத்துவிட்ட அம்பிபோல்வேகம் காட்டி தணவில்

பழுத்துவிட்ட சொல் எடுத்துப் பாப்புனைந்து

நடமாட விடுகின்றார் மருதிரு சோதரரை

நடராசக் கவிராயர் மிக நன்றாய்.