பக்கம்:விடையவன் விடைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:52 விடையவன் விடைகள்

பக்கத்தே வளைந்திருக்கும்; அதனல் வலம்புரி விநாயகர் என்று சொல்வார்கள்.

216. பத்தாம் பசலி என்ருல் என்ன ?

மிகப் பழையது, இப்போது உதவாதது என்ற பொரு எளில் இத்தொடர் வழங்குகிறது. பசலி என்பது கி. பி. 591 முதல் தொடங்கும் ஆண்டுக் கணக்கு. பத்தாம் பசலி என் பது கி. பி. 600-ஐக் குறிக்கும். ஆகவே, பழையது என்ற பொருளை உடையதாயிற்று.

217. அவகெடுங் கடலாடை என்பதில் அரவத்தை யுடைய கடல் என்று பொருள் கொள்வது தவரு ? சரியான பொருள் என்ன ? • , - ...

அரவத்தையுடைய கடல் என்பது தவறு. அன்று. ஆனால், அரவம் என்பதற்கு ஒசை என்று பொருள் கொள்ள வேண்டும். . .

218. சாவா மூவாப் பேராளன்' என்கிருர்களே; அதற்குச் சரியான பொருள் என்ன ? . . . . ‘. .

சாவா என்பது இறவாத என்னும் பொருளை உடையது. மூவா என்பது மூப்பை அடையாத என்ற பொருளை உடையது. 芷f了á தும் இன்றி முதுமையை அடைவதும் இன்றி எப்போதும் இளமையோடே இருக்கும் பெரியவன் என்று அத் தொடருக் குப் பொருள் கொள்ள வேண்டும். இறைவன் அத்தகையவன். 219. ു புல்லும், என்று சேர்த்துச் சொல்லும் போது புல் என்பது மாட்டுக்கு உணவாகிய புல்லைத்தான் குறிக் கிறதா ? . r

புல் என்பதற்குப் பல பொருள் உண்டு. நெல்லோடு சொல்லும்போது புல் என்பது புன்செய்த் தானியங்களைக் குறிக்கிறது. . . . . - . . . . . .

220. கோடி காட்டுதல் என்ருல் என்ன o