பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-32 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ தீஸ்ப் : அது ஒரு சாவி என்றா சொல்கிறாய்? ஊகும் நான் கேட்கமாட்டேன். எதையும் கேட்கமாட்டேன். நான் ரொதோல்போவைச்சந்தேகிக்கவேண்டுமென்பது உன் நோக்கமோ-எனக்கு அந்தச் சாவி வேண்டாம். போ-உன் பேச்சை நான் கேட்கமாட்டேன். ஒமோதேய் : அதோ அவரும் வருகிறார். அந்தச் சாவி உன்னிடத்தில் கிடைத்தபிறகு யாவும் விளக்கமாகச் சொல்கிறேன். அந்தச் சாவிதான் இரவு உனக்குப் பயன்படப்போகிறது. அதை எப்படியாவது வாங்கிக் கொள். இன்னும் கால்மணிநேரத்தில் நான் திரும்பி வந்து உன்னைப் பார்க்கிறேன். - - தீஸ்ப் : அறிவற்றவன்! நான் சொன்னது உனக்குக் கேட்கவில்லையா? -மீண்டும் கூறுகிறேன். எனக்கு அந்தச் சாவி வேண்டாம். ரொதோல்பேர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அந்தச் சாவி எனக்கு வேண்டாம். நான் சர்வாதிகாரியிடத்தில் இதைப் பற்றிக் கூறமாட்டேன். உன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. நீ திரும்பி வரவேண்டாம். பயனற்றது போ. ஓமோதேய் : இன்னும் கால்மணி நேரத்தில் (போகிறான்) (ஆன்ழெல்லோ வரு கிறான்) காட்சி-7 - திஸ்ப்-ஆன்ழெல்லோ தீஸ்ப்.: ஆம் நீங்களா- பிரபுவேயாரைத் தேடுகிறீர்கள்? ஆன்ழெல் ஆம் விாழிலோதஸ்காவைத் தேடுகிறேன். அவனிடம் ஒரு செய்தி கூறவேண்டும். - - திஸ்ப் : இன்னும்என்மீது ஐயமும் பொறாமையும்தானா 2 ஆன்ழெல் : જબ, - - “ . . .