பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விட்டு சித்தன் விரித்த தமிழ் பன்றி, தெளிவாக அஃது ஒரு பிரபந்தம் எனக் கூறாமை யாலும் அங்கனமே திருக்கோயில்களில் இருந்து வரும் வழக்கும் அது தனிப் பிரபந்தம் என்பதற்குத் தக்க ஆதாரம் இல்லாமையாலும் இரண்டையும் தக்க சான்று களாகக் கொள்வதற்கில்லை. மேலும் உபதேசரத்ன மாலை ஆழ்வார்கள் அவதரித்த நாட்கள் மாதங்கள் தலங்கள் முதலிய செய்திகளைக் கூறுகின்றதே யன்றி அவர்கள் அருளியுள்ள பிரபந்தங்களைப் பற்றி (பிரபந்த சாரம் போல்) யாங்கணும் கூறவில்லை. ஆயினும் திருப் பல்லாண்டு என்னும் திருமொழி அகண்ட திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கத்தில் முன்வாசல் போல் இருப்ப தாலும், அது வேதத்தின் பிரணவம்போல் திகழ்வதாலும் அதற்குத் தனிப் பெருமை உள்ளது. திருக்கோவில்களில் முதலில் ஒதப் பெறுவதற்கு இதனையே காரணமாகவும் கொள்ளலாம். திரு என்ற அடைமொழியால் இது சிறப்பிக்கப் பெறுவதற்கும் இதன் முதல் நிலையே காரணமாகும். இங்ங்ணம் அசைக்க முடியாத பல ஏதுக்களைக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை முதலானோர்க்கும் திருப்பல்லாண்டு பெரி யாழ் வார் திருமொழியின் தொடக்கத் திருமொழியே யன்றித் தனிப் பிரபந்தமன்று: என்பது தெளிவாகின்றது. இதன் ஒப்பற்ற பெருமைக்கு தனிப் பிரபந்தம் என்ற நிலையின்மையால் எவ்வாற் நானும் குறை நேராது. - х