பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பிள்ளைப் பெருமாள் அவதாரம் திண்ணார் தமிழளிக்கும் தண் பாண்டி நாட்டிலுள்ள பதினெட்டுத்திவ்வியதேசங்களுள் திருக்கோட்டியூரும் ஒன்று. இத்திருப்பதி இராமநாதபுரம் மாவட்டத்தில் (இப்போது இம்மாவட்டம் பசு ம் .ெ பா ன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் என்று திருநாமம் பெற்றுள்ளது) திருப்பத்துரர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார். மானாமதுரை-திருச்சி இருப்பூர்திப் பாதையில் கல்லல் என்ற நிலையத்தில் இறங்கி எட்டுக் கல் தொலைவு மேற்கு நோக்கிச் சென்று இவ்வூரை அடையலாம்; அல்லது சிவகங்கையில் இறங்கிப் பேருந்துமூலம் வடக்கு நோக்கிப் பதினாறு கல் பயணம் செய்தும் இவ்வூர் சென்று சேரலாம். மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடியிலிருந்து வருபவர்கள் திருப் புத்துார் (பல சாலைகளின் சந்திப்பு) வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிச் சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று இவ்வூருக்குச் செல்லலாம். இதுவே சிறந்த வழி. இவ்வூர் திருக்கோட்டியூர் என்று திருநாமம் பெற்ற தற்குக் காரணம் என்ன? மணிமுத்தா நதிக்கரையிலுள்ள இத் திருப்பதி முற்காலத்தில் கதம்ப முனிவரின் புண்ணிய ஆசிரமமாக இருந்தது. இரணியன் மூவுலகங்களையும் ஆட்சி செய்து தேவர்களை நைகின்றான். அவனை எப்படி ஒழிப்பது என்று வழி அறியாது திகைக்கின்றனர் தேவர்கள். கதம்ப முனிவர் உறையும் இத்திருத்தலத்தில் அரக்கர் எவரும் புக முடியாது சாபம் இருந்ததால், மும்மூர்த்திகளும்