பக்கம்:விதியின் நாயகி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பதிக்கப்பட்ட கையொப்பம், உறைவாயைத் திறக்கும் உரிமையை ஈந்தது. அழகேசனின் நயனமணிகளிலே ஆர்வமும் ஆதங்கமும் ஒன்றுக்கொன்று சமன் நிலையில் இயங்கும் உணர்ச்சிகளாகப் பிரதிபலித்தன. மடிக்கப்பட்டிருந்த நான்கு மடிப்புக் கடிதத்தைப் பிரதிபலித்தன. மடிக்கப்பட்டிருந்த நான்கு மடிப்புக்கு கடிதத்தைப் பிரித்து நேர்வாக்கில் பார்ப்ப தற்குள், அவனுக்குப் பதட்டம் கண்டது. எம்.ஏ. பட்டப் பரீட்சையில் தேர்வை எண்வாரியாகப் பார்த்தபோதிருந்த தென்பு எங்கே ஒடிற்ருே? கடைசிப்பக்கம் புரட்டப்பட்டது. இமைக் கரைகளில் அதிசயம் கரை சேக்கப்பட்டது. இதயத் தினின்றும் வெய்துயிர்ப்புத் தள்ளப் பட்டது. இதயம் விடு து.ாது’ போலும்! அந்தக் கடிதத்துக்குப் பேசத்தான தெரியாது? 'பெருமதிப்புக்கும் நல்வணக்கத்துக்கும் உரிய எனது எதிர்காலக் கணவர் அவர்களின் பாதகமலங்களில் தண்ட னிட்டு அடியாள் அபர் ளு எழுதுவதாவது: என்னுடைய இந்தக் கடிதம் உங்களுக்குத் திகைப்பை அல்லது ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடும். - அன்ருெரு நாள், தஞ்சையம்பதியில் என்னைப் பெண் பார்க்க தாங்கள் வந்தீர்கள். பிஞ்சுப் பிராயமதில் என் பால் ஏற்பட்ட ஒரு நல்லெண்ணம் காரணமாக, தாங்கள் என்னை ஆட்கொள்ள விழைவதாக என்னிடம் தாங்கள் தெரிவித்ததைக் கேட்ட நிலையில், மெய்யாகவே நான் மெய் சிலிர்த்துப் போனேன். காலச் சக்கரத்தின் விபரீதச் சுழற் சியின் விளைவாக, அடித்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு விட்ட எங்கள் குடும்பம் தங்களது உயர் அன்பினால் புத் துயிர் பெறப்போகிறதென்பதை அறிந்த நான் ஆண்டவனே நினைந்து நினைந்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்து, அந்த மகிழ்வுத் துளிகளையே ஐயனுக்குக் காணிக்கையாகவும் வைத்ததுண்டு! -