பக்கம்:விதியின் நாயகி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

  • கமலாட்சி! அப்படி யெல்லாம் கெட்ட பேச்சை மனசாலெ கூட நினைக்காதே அம்மா! நம்பினவங்களைத் தெய்வம் சோதிச்சாலும், கடைசி முடிவு நமக்குச் சாதகமாவே இருக்கும் கமலாட்சி!...உன் அப்பாவுடைய மிதமிஞ்சின சீக்கைப்பத்தி உனக்குத் தெருவிச்சா, நீ புழுவாத்துடி துடிச் சுப்போவியேன்னு, இதுநாள் பரியந்தம் மறைச்சேன். கடை சீலே இன்னிக்குக் காலம்பறத் தான் கடுதாசி போட்டேன். இடிக்கு மேல் இடியாவரச் செஞ்சு இப்படி நம்மளை பகவான் சோதிக்கிருரு நாம அற்பங்க!...தேவியோ விளையாட்டுக்கு ஈடு கொடுத்து நிற்க நம்மாலே முடியுமா? எல்லாம் தாயோட கிருபை தான்!...நீ வாம்மா, சாப்பிட!.டாக்டர் சொன்னதை நீ கேட்கலையா? எல்லாம் சரியாகிப் போயிடும். சமயம் புரிஞ்சு மாப்பிள்ளையை நீ கொண்டாந்ததே பெரிய சமர்த்துத்தான்!...நீ வாம்மா!’ - -

தொண்டைக் குழியில் நிரம்பி வழிந்த பாசத்தின் சுழிப்பில் தோய்ந்தெழுந்த ஆறுதல் மொழிகள் ம்களுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்குச் சன்னமாக ஒலித்தன. புதல்வியின் கண்களைத் துடைத்தாள். இரண்டொரு நீர் மணிகள் சிதறி, பாலமுதம் உண்ட குழவியின் நெற்றி மேட்டில் விழுந்தன. அகிலாண்டம் மகளின் கரம்பற்றிக் கூப்பிட்டபோது, கமலாட்சியின் நோக்கல் தன் ஆருயிர்க் கணவரின் கட்டிலில் குறிப்பாய்ந்திருக்கக் கண்டாள். அம்மா இவர் ரொம்ப ரொம்பத் தங்கமானவர். இவர் கையினலே எனக்குத் தாலிபாக்கியம் கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்க வேணும் அம்மா! மெய்தான் அம்மா என்று கமலாட்சி திருமணமான புதிதில் மனம் நிறைந்து. சொன்ன நடப்புக்கள் சிலையோடின. "ஈஸ்வரா: ாப்பிள்ளையைக் காப்பாற்று. என் ஒரே மகளின் தாலி. ாத்துக் கொடு. அம்பிகே. அங்க அசைவு துளியும் ட்டைய்ைப்போலக் கிடந்த மாப்பிள்ளைன்யக் க அவளுக்கு உலகம் பாழ் வெளியாய்விட்டதை போன்று ஒர் எண்ண்ம் தோன்றியது. விடிைக்கு வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/12&oldid=476422" இலிருந்து மீள்விக்கப்பட்டது