பக்கம்:விதியின் நாயகி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 17 காசி ம்ெல்ல எழுந்தார். காமாட்சி! திருக்கோ கர்ணம் வரை போயிட்டு வந்திடுறேன்!” என்ருர் காசி. அவள் துணுக்குற்ருள். திருக்கோகர்ணத்துக்கா? ஏன், மாப்பிள்ளையைப் பார்த்துப் பல்லேக் காட்டி, முடைக்கு அஞ்சு பத்து பணம் காசு வாங்கிட்டு வரவா?’ எரிச்சலும் எகத்தாளமுமாகக் கேட்டாள். . காசியின் கண்கள் ரத்தம் கட்டிச் சிவக்கத் தொடங்கி விட்டன.

  • காமாட்சி, பல்லுப் போனுலும் சொல்லுப் போகா தவன் இந்தக் காசி. பொண்ணைக் கொடுத்த மாமன்கார ளுச்சே என்கிற மட்டு மரியாதையைக்கூட மறந்து, பணத் திமிரிலே என்னையே எடுத்தெறிஞ்சு பேசின மாப்பிள்ளை கணபதி கிட்டவா நான் பல்லைக் காட்டப்போறேன்? .
  • பின்னே எதுக்குப் புறப்பட்றீங்க???

வேலே இருக்குது. நேத்திக்கு நெக்லஸைக் கொடுத்து அழுக்கு எடுத்து நகாசு போடச் சொல்லிக் கொடுத்திட்டுப் போனங்களே, அந்த மீளு அம்மாளோட ஊர் திருக்கோகர் னம்தான். இந்தச் சில்லறை வேலைக்கு அஞ்சு, பத்து கூலிக் காசு தந்தால், ரெண்டு நாள் பாடு தீருமில்லையா?? . கணவன் புறப்பட்டதும், காமாட்சி நெடுமூச்செறித் தாள். அந்தக் கண்டசரம் கண்ணுக்குள்ளேயே ஊசலாடி யது. கண்டசரம் போட்டு அழகு பார்க்கிற பொசிப்பு எனக்கு ஏது: ஹூம்!” - . - அந்தி மயங்கிய நேரத்தில், காசி தள்ளாடியபடி வீட் டுக்கு வந்து சேர்ந்தார். ஏ. காமாட்சி: என்று கூப்பிட்டு வர், வெளித் திண்ணையிலேயே அரிசிப் பையைப் போட்ட விட்டு உட்கார்த்தார். SS SSAS SSAS SSAS SSAS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/81&oldid=476491" இலிருந்து மீள்விக்கப்பட்டது