பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 3 விந்தன் கட்டுரைகள் யிருப்பது குறித்து நாம் பெரிதும் வருந்துகிறோம். ஏனெனில் மறைந்தபிறகும் தம் புகழில் அவர்களுக்கு இரவல் கொடுக்கும் ஆசிரியர் அவர்களின் மாண்பைக் கண்டு நம்மால் இந்தச் சமயத் தில் மகிழ முடியவில்லை--கடந்த கால நினைவுகள் பல நெஞ்சை விட்டு இன்னும் நீங்காமல் இருப்பதால்: மற்றபடி ஆசிரியர் அவர்களுக்கோ, 'கல்கி' காரியாலயத்தா ருக்கோ நம் அனுதாபம் தேவையில்லை-ஏனெனில், அவர்களு டைய அனுதாபத்துக்கு உரியவர்கள் நாம்தான், சொல்லோடு செயலாற்றும் திறமையுங் கொண்ட தன் ஒரே புதல்வனை இழந்து விட்டுத் தவிக்கும் நம் தாய்த்திருநாடுதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை ஆசிரியர் அவர்களைப் பிரிந்த துயர் ஆறப்போவதுமில்லை; தீரப் போவதுமில்லை! -மனிதன், 1954 +++++