இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புகையிலையும் புதுமைப்பித்தனும் 29 இறுதியிட்டுச் சொல்லவில்லை. ஏன் நம்முடைய அனுபவஞானம் கூட அதற்கு நேர் விரோதமாய்த்தான் இருந்து வருகிறது. எனவே, நீங்கள் கஞ்சாவைப் பற்றிக் கவலைப்படவேண் டாம், புகையிலையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். மேலே கூறிய இலக்கிய உணர்ச்சியை மட்டும் நீங்கள் உங்களிடையே வளர்த்துக் கொண்டால் போதும்; உங்கள் எழுத்தாளர்கள் சாட்சாத் ஸ்டாலினைப் போலவும் வின்ஸ்டன் சர்ச்சிலைப் போலவும் பண் டித நேருவைப் போலவும், சுப்பராயனைப் போலவும் ஓயாமல் புகைப்பிடித்தாலும் நெடுநாட்கள் உயிரோடிருந்து தமிழை வளப்ப டுத்துவார்கள், தமிழ் நாட்டை மேம்படுத்துவார்கள். இதில் சந்தேகமேயில்லை! - பொன்னி , 10-7-1951 xx xxxx xx xx