பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

விந்தன் கதைகள்


தங்கையோ, ‘அண்ணா இருக்கிறார்!’ என்று இனிமேல் தைரியமாய் இருப்பதற்கில்லையே!’ என்று வருந்துகிறாள்.

எல்லாம் அவரவர்களுடைய சொந்த நலனைப் பற்றி - அவனால் தாங்கள் அடைந்த அடையவிருக்கின்ற நன்மைகளைப் பற்றி.

அப்படியானால் இவ்வுலக வாழ்வை நீத்த அந்த அரங்க நாதனைப் பற்றி....

வருந்துவார் யார்?

இந்தக் கேள்விக்கு 'கேள்விக் குறி'க்கு உங்களில் யாராவது 'முற்றுப் புள்ளி' வைக்க முடியுமா?

எப்படி முடியும்? சுற்றமும் நட்பும் சூழ இருப்பதே சுயநலத்துக்காகத் தானே!

அந்த 'சுயநல'த்தை மனிதன் செத்தாலும் விட மாட்டார்கள் போல் இருக்கிறது!