பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"தாயிற் சிறந்ததொரு..."

329

சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் கடற்கரைக்குக் கிளம்பினர், கவிந்திருந்த இருளிலும் அவர்களுடைய மனம் ஏனோ தனிமையை நாடிற்று. உயிர்பெற்ற நிழல் படங்களைப்போல் உருமாறிவிட்ட அவர்கள், கடற்கரையோரமாக வெகு தூரம் நடந்தனர். கடைசியில் ஒரு கட்டு மரத்துக்கு கீழே உட்கார்ந்தனர்.

"எனக்கு நல்ல அம்மா வந்து வாய்த்தாள்" என்றான் ஜானகிராமன் அலுப்புடன்.

அப்படிச் சொல்லாதீர்கள். "தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை!" என்றாள் வைஜயந்தி வழக்கம் போல் சிரித்துக் கொண்டே.

இருவரும் 'கலகல' வென்று நகைத்தனர்.

அதற்குள் ஒருவன் எங்கிருந்தோ வந்து அவர்களுக்கு எதிரே யிருந்த கட்டு மரத்தின் மேல் உட்கார்ந்தான். உட்கார்ந்தவன் சும்மா இருக்கவும் இல்லை;

"காத லாகினேன் - கண்ணே!
காத லாகினேன்!"

என்று கரக் கம்பம் சிரக் கம்பம் எல்லாம் செய்து, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாகப் பாட ஆரம்பித்து விட்டான்.

"ஐயோ, பாவம்! இவன் என்னத்துக்கு இப்படி உருகித் தொலைகிறான்!" என்று வைஜயந்தி அனுதாபத்துடன் சொன்னாள்.

"எல்லாம் நம்முடைய கஷ்ட காலந்தான்!" என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டே, அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தான் ஜானகிராமன்.

வைஜயந்தி அவனைத் தொடர்ந்து சென்றாள். அடுத்தாற் போலிருந்த ஒரு மணல் மேட்டுக்குக் கீழே இருவரும் உட்கார்ந்தனர்.

"காதல் மனிதர்களைப் பைத்தியக்காரர்க ளாக்கிவிடுகிறது என்கிறார்களே, அது என் அம்மாவைக்கூட விடவில்லை பார்த்தாயா?" என்றான் ஜானகிராமன்.

"உஸ்.... தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை!" என்று சொல்லி அவன் வாயைப் பொத்தினாள் வைஜயந்தி.

அதே சமயத்தில் 'டூப்ளிகேட் இங்கிலீஷ்'காரர்களைப் போல விளங்கிய கலாசாலை மாணவர்கள் இருவர் - இல்லை இல்லை;