பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பும் அதிகாரமும்

563

அடுத்த கணமே அவருடைய ஆக்கினை நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இருள் கவிந்த சிறையிலே, காலைக் கதிரவனையும் மாலை மதியையும், பனி மூடிய மலைத் தொடர்களையும், மலர் நிறைந்த சோலைகளையும், வானளாவிய மரங்களையும் வானம்பாடிக் குருவிகளையும் கவி இஸா காண முடியுமா? - அவற்றையெல்லாம் காணாமல் அவன் கவி இதயம் வெடித்து விடும் போலிருந்தது. ஆனாலும் சிறையின் ஜன்னல் வழியே பார்க்க முடிந்த அவனுடைய அருமை மான், அன்பைக் கவர்ந்த மான், அரண்மனை உத்தியான வனத்தில் கழுத்தில் விலங்கிடப்பட்டுக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த மான் அயர்ச்சி அடைந்திருந்த அவன் உள்ளத்துக்கு ஒரளவு உணர்ச்சியூட்டிற்று.

"அரே, அல்லா!' என்று சிறையிலிருந்தபடியே அந்த மானை அன்புடன் கூவி யழைப்பான் இஸா. அது இழுத்துப் பறித்துக் கொண்டு எப்படியாவது அவனை அடைந்துவிடத் துடியாய்த் துடிக்கும். ஆனால் அதன் பலன்? - இரும்புச் சங்கிலி இறுகி இறுகி அதன்கழுத்தில் செக்கச்செவேரென்று இரத்தம் கசியச் செய்துவிடும். அந்தக் காட்சியைக் கண்டதும் கவியின் உள்ளம் பதை பதைக்கும், நெஞ்சு நெக்குருகிக் கண்ணிர் கசிந்துவிடும். ஒரு கையால் தன் கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கையால் "வேண்டாம் அல்லா, வேண்டாம்!” என்று இரைந்தபடி சமிக்ஞை காட்டி அதை வேண்டிக் கொள்வான் இஸா.

'அல்லா' வோ அவனை 'வா, வா!' என்று அழைப்பது போல் மருண்டு நோக்கித் தன் முன் கால்கள் இரண்டையும் தூக்கி தூக்கி நிற்கும்.

"பொறு அல்லா பொறு! காலம் மாறும்!" என்பான் கவி.

'அல்லா'வைப் பிரிந்ததிலிருந்து அவனுக்கு உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. அவனைப் பிரிந்ததிலிருந்து 'அல்லா'வும் அதே நிலைமையில் தானிருந்தது.

ராணி ஜிஜியாவோ 'அல்லா'வின் அன்பைப் பெறுவதற்கு என்ன வெல்லாமோ செய்து பார்த்தாள். அடிக்கடி அதன் முதுகை