பக்கம்:வியாச விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

III சொற்றொடரியல் - Syntax. வாக்கிய அமைப்பு - Structure of Sentence. 1. சொன்முறை - Order of Words. ஒரு வாக்கியத்தில் எழுவாய் முன்னும் பயனிலை பின்னும் செயப்படுபொருள் இடையுமிருத்தலே இயல்பான முறையாகும். உ-ம். சம்பந்தர் சமணரை வென்றார். எழுவாயில்லாத ஒரு வாக்கியமும் எழுதுதல் கூடாது. தற்கூம் றில் (Direct Speech) மட்டும் தன்மை முன்னிஸ் எழுவாய்கள் தொக்கு நிற்கலாம். 2. முறைமாற்று - Hyperbaton or Inverted Order சில வாக்கியங்களில் வற்புறை (emphasis) நிமித்தம் வாக் கிய வுறுப்புக்கள் முறை மாறி வரும். உ-ம். கண்டேன் சீதையை, அடித்தான் இராமன் . 3. சொல்லிடையீடு - Inter-verbal Space. சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண்டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிய தொடர் கள் வேறு தொடர்களாக மாறிவிடலாம். உ-ம், அரிசி, உசம்பு - அரி,சிவசம்பு 4. முன்மைநிலை - Priority. தழுவுகின்ற சொற்களும் சொற்றொடர்களும், தழுவப்படு கின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்தவேண்டும். உ-ம், தம் தாய் தந்தையர் பெயர் ஆதி பகவன் என்பதைத் திரு வள்ளுவர் தம் முதற் குறனாற் குறிப்பித்தார் என்பது, திருவள்ளுவர் தம் தாய் தந்தையர் பெயர் ஆதிபகவன் என்பதைத் தம் முதற் குறளாற் குறிப்பித்தார் என்றிருத்தல் நலம். அறிவும் தொழிலும் பற்றிய சிறப்புப் பெயர், இயற்பெயர் (Proper Name) க்கு முன்னும் பின்னும் வரலாம்; முன்வரின் இயல்பாம்; பின் வரின் இயற்பெயர் சிலவிடத்து விகாரமாம் உ-ம், புலவன் வள்ளுவன், வள்ளுவப் புலவன் ஆசிரியர் பிரகாசம் சாமுவேல், பிரகாசம்சாமுவேலாசிரியர்,