பக்கம்:வியாச விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 8. திட்டம் - Precision. ஒருபொருளை ஐயமும் மதிப்பும் பொதுநிலையுமின்றி இயன்றவரை வரையறையாய்ச் சொல்வது திட்டமாகும். உ-ம். கம்பர் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டவர் என்னாது, 9-ம் ஏற்றாண்டினசென்சு. இவ்கனமே பிறவும். 9. பொருத்தம் - Propriety. ஒரு சொல்லை அதற்குறிய பொருளிலும், ஒரு பொருளுக்கு அதற்குத் தகுந்த சொல்லையும் வழங்குவது பொருத்தமாகும். உ-ம். உண்டி வினை கூறுமிடத்து, சோறு உண்டான், சாப்பிட் டான்; தண்ணீர் குடித்தான்; பலகாரம் தின்றான் என்று கூறல்வேண் டும். - ஒருவனிடம் ஒருபொருளைக் கேட்கும்போது, கொடு என்பது உயர்க்கோன் சொல்: கா என்பது ஒத்தோன் சொல்; ஈ என்பது இழிக் தோன் சொல். இனிமை - Euphony. இழிசொல்லும் வழுஉச்சொல்லும் நீக்கிப் பெரும்பாலும் தென் சொற்களால், ஓசையின்பம்பட இயல்பான மோனையெது கையமைத்தெழுதுவது இனிமையாகும். உ-ம், " திருமைலையில் ஒரு களுவ வேளாளர் பால் விடப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டு வந்த மசவை (திருவள்ளுவரை)க் கண்டு, அவ் வேளாண்டலைவரின் உறவினர் "யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற் றப்போகட்ட அகதிப்பிள்ளையை இவர் வளர்க்கின்றார். ஈதென்னை!" என்று பழி சு. முற்ப, அதற்கு மிக வருந்திய அச்செல்வர் அம்மாவைப் பிரிதற்காற்றாய்த் தம் விளை புலத்தில் உழுதொழில் செய்யும் பறைக் குடிகளுக்குக் குருவாயுள்ள ஒரு வள்ளுவனை அழைத்து, அவன் கையில் அதனை ஈந்த, " இதனைப்போற்றி வளர்ப்பாயாக" எனக்கூறி, அவற்கு அதன்பொருட்டு ஆம் செலவுகட்கும் வேண்டும் பொரூன் நல்கினார்." -ஆசிரியர் மறைமலையடிகன். இனிமையற்றிக் கவனிக்கவேண்டிய சில குறிப்புக்கள் :1. சொற்களைப் பெரும்பாலும் புணர்த்தெழுதல், 2. சில சொற்களின் பல்வடிவங்களில் இன்னோசையுள்ளவற்றைக் கொள்ளல்,